திருப்பூர் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
கலைச் சிறகுகள்- 2025 என்னும் கலை விழா
திருப்பூர், வஞ்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை சிறகுகள்- 2025 என்னும் கல்லூரி கலைத்திருவிழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. 30 ந் தேதி நடந்த முதல் நாள் விழாவுக்கு கல்லூரி முதன்மை அதிகாரி முனைவர் ரேச்சல் நான்சி ஃபிலிப் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர். மோகன சவுந்தரி வரவேற்றார்.விழாவில் மெஹந்தி,நைல் ஆர்ட், சாரி டிராப்பிங்,ஹேர் டூ, சோலோ பாட்டு,குரூப் பாட்டு,ரேம்ப் வாக்,ஃபேஸ் பெயிண்டிங்,குப்பை பொருட்களில் அழகிய பொருட்கள் தயாரிப்பது மற்றும் அடுப்பில்லா சமையல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. இந்த போட்டிகளில் 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.போட்டியின் நடுவர்களாக சூர்யாதங்கராஜ்,ஸ்வர்ணலதா,சித்ரா,செல்வி.ஹேஸ்லின் ஆகியோர் இருந்தனர்.விழாவில் கல்லூரி பேராசிரியைகள் கணிப்பொறித் துறை தலைவர் முனைவர் சத்யா, ஆர்த்தி மற்றும் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
2 ஆம் நாள் விழா 31 ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சோலோ நடனம், குரூப் நடனம், கருப்பு - வெள்ளை நடனம், மைமிங், அறிவுத்திறன் ஷோ, ரங்கோலி, போட்டோகிராபி ஆகிய போட்டிகள் நடக்கிறது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.