Loading...
Wed 02, 2025
விரைவு செய்திகள்
தற்போதைய செய்திகள்
மலேசியாவில் எரிவாயு குழாயில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து
மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு வெளியே சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில் பூச்சோங் நகரில் அரசுஎரிசக்தி நிறுவனமான பெட்ரோனாஸ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அமைந்துள்ள எரிவாயு குழாயில் நேற்று (ஏப்ரல்.01) காலை பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டு, தீப்பிழம்பு வானுயரத்திற்கு  காட்சியளித்தது.  விபத்து ஏற்பட்டவுடன் அவசரகால இயந்திரங்களை கொண்டு பாதிப்படைந்த குழாய் உடனடியாக மூடப்பட்டது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட 500 மீட்டர் நீளமுள்ள எரிவாயு குழாய்யை  மூடி தனிமைப்படுத்தப்பட்டது.  இத்துடன்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த மூன்று எரிவாயு நிரப்பும் நிலையங்களும்  மூடப்பட்டன. இந்த தீ விபத்தில் அருகில் இருந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியது. கிட்டதட்ட 50 வீடுகளில் பலர் சிக்கி இருக்கும் நிலையில் அவர்களை  மீட்கும் பணியிலும்  எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீப்பிழம்பை கட்டுப்படுத்தும் பணியிலும் சிலாங்கூர், சுபாங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் பூச்சோங்கைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இந்த விபத்தில் தீக் காயங்கள், சுவாச பிரச்னை, பிற காயங்களால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர் தீயணைப்பு முயற்சிகளுக்கு உதவ பாம்பா (தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை) ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது. அருகில் உள்ள கிராமமான கம்போங் கோலா சுங்கை பாருவுக்கு தீ பரவியதால் நிலைமை மோசமடைந்தது, இதனால் பல வீடுகள் தீப்பிடித்தன. சுமார் 190 வீடுகள் சேதமடைந்ததால் வீடற்ற நிலையில் இருந்தவர்கள் உட்பட குறைந்தது 305 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டதால், அவசர கால மீட்புப் பணியாளர்கள் அவசர மீட்டனர். மீட்கப்பட் டவர்கள் திவான் செர்பகுனா மஸ்ஜித் புத்ரா ஹைட்ஸில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக்காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சேதத்தின் முழுவிவரம் இன்னும் மதிப்பிடப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்காலத்தில் நிதி உதவி வழங் கப்படும் மலேசிய அரசு அறிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த தீ விபத்து மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More 02-04-2025 06:52 AM
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ரமலான் விரதம் அதிகாலை தொடங்கி சூரியன் மறையும்வரை விரதம் மேற்கொண்டு வந்தனர். தினமும் பள்ளிவாசல்களில் நடைபெறும் 5 வேளை தொழுகைகளில் பங்கேற்று தொழுகை நடத்தினர். நோன்பை ஒட்டி பள்ளிவாசல்களில் மாலை நேரத்தில் நோன்பு கஞ்சியும் வழங்கப்பட்டது. இந்தநிலையில்  30 நாட்கள் முடிந்த நிலையில்  ரமலான் பண்டிகை கொண் டாடப்பட்டது. இதற்காக நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து பண்டிகையை கொண்டாடியதுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் காலை சிறப்பு தொழுகை நடை பெற்றது. பெரிய பள்ளிவாசல், பெரிய தோட்டம் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல், எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகே உள்ள பள்ளிவாசல், காதர்பேட்டை, கோம்பை தோட்டத்தில் உள்ள மதினா பள்ளிவாசல். டூம் லைட் மைதானம் பள்ளிவாசல், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசல் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினார்கள். நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க சிறப்பு பிரார்த்தனையில் இஸ்லாமி யர்கள் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து பரிமாறிக் கொண்டனர். பின்னர் ஏழை களுக்கு பித்ரா தானம் வழங்கினார்கள். பிரியாணி தயாரித்து நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான ஆண்களும், பெண்களும் பங்கேற்று தொழுகை நடத்தினார்கள். ரம்ஜான் பண்டிகையை யொட்டி திருப்பூர் மாநகர கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இதேபோல் தாராபுரத்தில் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக விரதம் இருந்து ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்கள் செய்து முழு நேர இறை வழிபாட் டில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையின் நிறைவு நாளான நேற்று ஒரே இடத்தில் ஓன்றுகூடி நாட்டில் சமத்துவம் சகோதரத்துவம் அமைதி வேண்டி சிறப்பு பிரார்த் தனை செய்தனர். முன்னதாக பள்ளிவாசல்களை சார்ந்த ஜமாத்தார்கள் இறைவனை வாழ்த்தி திக்கீர் முழக்கத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு தாராபுரம் இறைச்சி மஸ்தான் நகரில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் 5 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் திரண்டனர், தொடர்ந்து தாராபுரம் அட்டவணை பெரிய பள்ளிவாசல் காரியதரிசி முகமது இப்ராஹிம் ரமலான் சிறப்புத் தொழுகைக்காக வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அட்டவணை பள்ளிவாசல் தலைமை இமாம் மீரான் கனி சிறப்பு தொழுகையை நடத்தி னார் தொடர்ந்து உலகில் உள்ள அனைத்துதரப்பு மக்களும் அமைதியுடனும் அர்ப்பணிப்புடனும் சமத்துவம் சகோதரத்து வத்துடனும் அமைதியான வாழ்க்கை வாழ இறையருள் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர் தொழுகைக்காக வந்திருந்த அனைவரும் அதை வழிமொழிந்து தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களையும் சகோதரத்து வத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் ஸலாம் கூறி கட்டித் தழுவிக்கொண்டனர். ஈத்கா - மைதானத்தின் நுழைவு வாயில் பகுதியில் திரண்டு நின்ற ஏழை எளிய மக்களுக்கு உதவி தொகைகளை வழங்கினர். பின்னர் ஒவ்வொரு ஜமாத்தினரும் ஊர்வலமாக புறப்பட்டு ஜமால் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இறந்தவர்களை அடக்கம் செய்யும் கபர்ஸ்தான் பகுதிக்கு வந்து தங்களது முன்னோர்கள் உலகை விட்டு மறைந்த உறவினர்கள் பெற்றோர்களின் ஆன்மா  சாந்திக்காக பிரார்த்தனை நடத்தி பின் அவரவர் இல்லங் களுக்கு திரும்பினர்.
Read More 02-04-2025 06:46 AM
கடந்த 2023 அக்டோபர் 7அன்று பாலஸ்தீனத்தில் இருந்த ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலை தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பேரை பணயக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் போர் வெடித்தது. இஸ்ரேலிய ராணுவம் பதிலடியாக ஹமாஸை அழிக்க பாலஸ்தீனத்தின்மீது படையெ டுத்து இன்று வரை 50,350 க்கும் மேற்பட்டோர் கொன்று குவித்தனர்.  பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடுமையான வான் வெளி தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது பாதிக்கப்படும் பொதுமக்களுக்காக பாலஸ்தீன செம்பிறை சங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அர்ப்பணிப் புள்ள ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனிதாபிமான முறையில் காய மடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 23 ந் தேதி  தெற்கு காஸா, அல்-ஹஷாஷின் பகுதியில் பாதுகாக்க வேண்டிய சின்னங்களை அணிந்திருந்து ஆம்புலன்ஸ்கள் என தெளிவாக குறிப்பிட்ட வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஹெட்லைட்கள், அவசர சமிக்ஞை கள் இல்லாமல் ஐடிஎஃப் துருப்புக்களை நோக்கி சந்தேகத்திற் கிடமான முறையில் முன்னேறி வந்த இஸ்ரேலிய துருப்புக்கள் முதல், இரண்டாவது, மூன்றாவது வாகனத்தையும் குறிவைத்து தாக்கி குறிப்பாக ரெட் கிரசண்ட் மருத்துவர்களை குறிவைத்து தாக்கி கொன்று பின்னர் அவர்களை புதைகுழியில் போட்டு புதைத்து வைத்து சென்றுவிட்டனர். இப்போது அந்த ஒரு புதைகுழியில் இருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.கொல்லப் பட்டவர்களில் ஆம்புலன்ஸ் அதிகாரிகள் முஸ்தபா குஃபாகா, சலே முவாமர், எஸ்ஸெடின் ஷாத் தன்னார்வலர்கள் முகமது பஹ்லூல், முகமது அல்-ஹெய்லா, அஷ்ரஃப் அபு லப்தா, ரேத் அல்-ஷெரிஃப் மற்றும் ரிஃபாத் ரத்வான் என்றும்,  ஆம்புலன்ஸ் அதிகாரி அசாத் அல்-நசாஸ்ரா இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 8 நாட்களாக நாங்கள் அவர்களைத் தேடி வருகிறோம். ஆனால அவர்கள் ரெட் கிரசண்ட், ஐ.நா. உடனான அனைத்து ஒருங்கிணைப்பையும் மறுத்துவிட்டனர்.இந்தநிலை யில் இஸ்ரேல் கடந்த மே மாதம் ரஃபாவில் தனது முதல் தாக்கு தல் நடவடிக்கையை தொடங்கியது. இரண்டு மாத கால போர் நிறுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் நகரத்தில் எஞ்சியிருந்த தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முதல் கட்டம் முடிவுக்கு வந்து ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்காத நிலையில் மார்ச் 18 அன்று காசாவில் இஸ்ரேல் தனது வான்வழி குண்டுவீச்சு மற்றும் தரைவழி தாக்குதலை மீண்டும் தொடங்கியது. அன்றிலி ருந்து காசாவில் குறைந்தது 1,001 பேர் கொல்லப்பட்டு ள்ளனர் என்று அந்தப்பிரதேசத்தின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்ச கம் தெரிவித்துள்ளது.ஹமாஸின் மூத்த அதிகாரி பாசெம் நைம் தாக்குதலைக் கண்டித்தார். சர்வதேச மனிதாபி மான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மீட்புப் பணியாளர்களை குறிவைத்து கொலை செய்வது ஜெனீவா உடன்படிக்கைகளை அப்பட்டமாக மீறுவதாகவும், போர்க் குற்றமாகும் என்று அவர் கூறினார்.இந்த நிலையில் இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குத லையும், மனிதாபிமற்ற  நடவடிக்கையையம்  உலக நாடுகள் கண்டித்துள்ளன.
Read More 01-04-2025 03:59 PM
அரசியல்
அவிநாசி, திருமுருகன்பூண்டி பாஜக புதிய நிர்வாகிகள் தேர்வு
Read More 01-04-2025 05:08 PM
தமிழக செய்திகள்
திருப்பூரில் ரூ.1.07 கோடி மதிப்பில் தெற்கு எம்.எல்.ஏ அலுவலக கட்டிட பூமி பூஜை
Read More 02-04-2025 08:07 AM
உலகச் செய்திகள்
விளையாட்டு மற்றும் சினிமா செய்திகள்
கல்வி மற்றும் மருத்துவ செய்திகள்
ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யு.கே.ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
கல்வி01-04-2025 04:09 PM
Read More
மீம்ஸ்
இன்றைய நிகழ்ச்சிகள்
தங்கம் விலை
02-04-2025 10:20 AM
தங்கம் 22 காரட்
₹ 8510
தங்கம் 24 காரட்
₹ 9284
வெள்ளி கிராம் விலை
₹ 114
சொர்க்கவாசலில் இன்று
மாவட்ட செய்திகள்
100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு  சம்பள நிலுவை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
Read More 02-04-2025 11:07 AM
திருப்பூரில் ரூ.1.07 கோடி மதிப்பில் தெற்கு எம்.எல்.ஏ அலுவலக கட்டிட பூமி பூஜை
Read More 02-04-2025 08:07 AM
திருப்பூர் மாவட்டத்தில் ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
Read More 02-04-2025 06:46 AM
மலேசியாவில் எரிவாயு குழாயில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து
Read More 02-04-2025 06:52 AM
அவிநாசி, திருமுருகன்பூண்டி பாஜக புதிய நிர்வாகிகள் தேர்வு
Read More 01-04-2025 05:08 PM
பாலஸ்தீன செம்பிறை சங்கம் ஊழியர்கள் 15 பேரை கொன்று புதைத்த இஸ்ரேல் படையினர்
Read More 01-04-2025 03:59 PM
முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்
Read More 02-04-2025 08:22 AM
திருப்பூர் மாவட்ட ஐ.என்.டி.யு.சி. கவுன்சில் கூட்டம்
Read More 02-04-2025 08:17 AM
ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யு.கே.ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
Read More 01-04-2025 04:09 PM
வாணியம்பாடி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் பாதிப்பு
Read More 02-04-2025 11:09 AM