Loading...
Fri 04, 2025
விரைவு செய்திகள்
தற்போதைய செய்திகள்
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் பெண்களின் "அரோகரா, அரோகரா" கோஷத்துடன் நடந்தது
திருப்பூர் மாவட்டம், 4- செட்டிபாளையம் கிராமம், அங்கேரிபாளையத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று 2 ந் தேதி (புதன்கிழமை) நடந்தது. கும்பாபிஷேகமானது கடந்த 30 ஆம் தேதி திங்கட் கிழமை காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், காப்பு அணிவித்தல், தீபாராதனையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கோபுர கலசம் வைத்து சிலைகளுக்கு கண் திறப்பு செய்வித் தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீர்த்தகுடம், முளைப்பாரி எடுத்து வருதல், முதல்கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8:00 மணிக்கு மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்கி, தொடர்ந்து 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, மூன்றாம் கால யாக வழிபாடுகளும் நடந்தது. இரவு 9 மணிக்கு விநாயகர் மற்றும் மாகாளியம்மனை பீடத்தில் எழுந்தருள செய்தும், எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது.இதனைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 6:30 மணிக்கு மங்கள இசையுடன், மூத்த பிள்ளையார் வழிபாடு, நான்காம் கால யாக பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 9.30 மணி அளவில் திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு விமான கோபுர கலசத்திற்கும், பரிவார மூர்த்திக்கு மஹா கும்பாபிஷேக பெருவிழா நடந்தது. மகா கும்பாபிஷேகத்தை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீ மாணிக்க வாசக மூலாம்லாய குருபீடம் 57வது ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக குருசாமிகள் தலைமை யில், திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.என் விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், வடக்கு மாநகர திமுக செயலாளர் தங்கராஜ், ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் கமிட்டி தலைவர் சாமிநாதன், செயலாளர் முருகசாமி,பொருளாளர் ஸ்ரீனிவாசன், துணைத் தலைவர் குப்புசாமி, துணைச்செயலாளர் சுப்பிரமணியம்,பிரதீபா ராமசந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருமுருகன்பூண்டி அருள்மிகு திருமுருகநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீ முத்துசிவ சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் பூண்டி சிவாச்சாரியார்குழுவினர் நடத்தினர். அப்போது வானத்தில் கருடன் பறக்க பெண்களும், பக்தர்களும் உற்சாகம் அடைந்து மாகாளி அம்மனுக்கு அரோகரா அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தொடர்ந்து பின்னர் காலை 10.15 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அலங்காரம், தசதான தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் கே மாரப்பன், முன்னாள் மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன், 9 வது வார்டு கவுன்சிலர் திவ்யபாரதி பாலாஜி, கோட்டா பாலு மற்றும் தொழில் அதிபர்கள் முருகசாமி, சுரேஷ், ஏ.பி.பெரியசாமி, அங்குராஜ், ஆர்.மாரப்பன், தங்க முத்துசாமி, பி.சுப்பிரமணியம், சந்தோஷ்குமார்ராஜாமணி, ஆர்.சுப்பிர மணியம், எஸ்.பாலசுப்பிரமணியம், மாரிமுத்து, மாகாளியம்மன் கோயில் கமிட்டி உறுப்பினர் கள், ஊர் பிரமுகர்கள், முக்கிய விருந்தினர்கள், பெண்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அங்கேரிபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் செய்து இருந்தனர். மண்டல பூஜைகள் நாளை 3 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 7 மணி அளவில் தொடர்ந்து 24 நாட்கள் நடைபெறுகிறது.
Read More 02-07-2025 07:22 PM
மருத்துவத் துறையில் பி.சி. ராயின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூலை 1ஆம் தேதியை ஆண்டுதோறும் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் ஷெரீப் காலனியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் உயிர் காக்கும் உன்னதச் செயலை உயிர் மூச்சாகக் கொண்டு இருக்கும் மருத்துவர்களை பாராட்டும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் சுவாதி மாணவர்களுக்கு மருத்துவ பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் வெள்ளை கோட் அணிந்து, ஸ்டெதாஸ் கோப் மாட்டிக்கொண்டு டாக்டர்கள் உடையில் மருத்துவர்களின் உன்னதப் பணியை நாடகமாக நடித்துக் காட்டினார்கள். பொது நலனும், கருணை உணர்வும் மிக்க மனித சேவைத் தொழில் தான் மருத்துவம். பூமிப்பந்தை தனது சேவை உள்ளத்தால் உயிர்பித்து கொண்டிருப்பவர்கள் மருத்துவர்கள். நாடு வாழ நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும் என்று பள்ளித் தலைவர் மோகன் கே.கார்த்திக் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் வினோதினி, பள்ளி முதல்வர் நிவேதிகா, இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் ஆகியோர் அனைத்து மருத்துவர்களையும் பாராட்டி வாழ்த்து கூறினார்கள்.
Read More 01-07-2025 02:37 PM
திருப்பூர் மாவட்டம், 4- செட்டிபாளையம் கிராமம், அங்கேரிபாளையத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நாளை 2 ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. கும்பாபிஷேகம் கடந்த 30 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், காப்பு அணிவித்தல், தீபாராதனையுடன் தொடங்கியது காலை 10 மணிக்கு கோபுர கலசம் வைத்து சிலைகளுக்கு கண் திறப்பு செய்வித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணிக்கு கங்கை உள்பட புதிய நதி தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகைகளை அங்கேரிபாளையம் சுகம் நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது நாட்டியம் ஆடும் 2 வெள்ளை குதிரைகள், 3 காளை மாடுகள் முன்னே வர திருப்பூர் வடக்கு தொகுதி எம் எல் ஏ விஜயகுமார் தலைமையில் பெண்கள், சிறுவர், சிறுமிகள், கோவில் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் முளைப்பாரிகளை தலையில் சுமந்து பக்தி பரவசத்துடன் ஆடிப்பாடி அங்கேரிபாளையம் பிரதான வீதிகள் வழியாக மாகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து விமான கலசங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் விநாயகர் கோவிலில் இருந்து கிராம வலம் நிகழ்ச்சி நடந்தது.மாலை 6 மணிக்கு முதல்கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு செய்து விமான கோபுர கலசத்திற்கும், பரிவார மூர்த்திக்கு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடக்கிறது. பின்னர் காலை 10.15 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அலங்காரம், தசதான தரிசனம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மகா கும்பாபிஷேக விழா கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன ஸ்ரீ மாணிக்க வாசக மூலாம்லாய குருபீடம் 57வது ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்க வாசக குருசாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை திருமுருகன்பூண்டி அருள்மிகு திருமுருகநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீ முத்து சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் செய்து வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை அங்கேரிபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் திருப்பணி ழுழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
Read More 01-07-2025 09:53 AM
அரசியல்
தமிழக செய்திகள்
உலகச் செய்திகள்
விளையாட்டு மற்றும் சினிமா செய்திகள்
கல்வி மற்றும் மருத்துவ செய்திகள்
தீரன் சின்னமலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
கல்வி01-07-2025 09:20 AM
Read More
மீம்ஸ்
இன்றைய நிகழ்ச்சிகள்
சொர்க்கவாசலில் இன்று
மாவட்ட செய்திகள்
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் பெண்களின் "அரோகரா, அரோகரா" கோஷத்துடன் நடந்தது
Read More 02-07-2025 07:22 PM