திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், கோட்டை தெருவில் வசித்து வருபவர் தில்ஷாத். இவரது 2 வது மகள் நிஸ்பா (வயது 7). இவர் திருப்பத்தூரில் உள்ள பூங்கா அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நிஸ்பா நேற்று 1 ரூபாய் 2 ரூபாய் காசுகளை வாயில் வைத்து விளையாடி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 காசுகள் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த மாணவி அழுது கொண்டு இருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது நல்லவேளையாக அந்த 2 நாணயங்களும் தொண்டையின் முன்புறம் உள்ள உணவு குழாயில் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து டாக்டர்கள் தீபானந்தன், சத்தியநாராயணன் மற்றும் சக்தி கணேசன் ஆகிய மருத்துவ குழுவினர் துரிதமாக செயல்பட்டு நிஸ்பாவுக்கு மயக்க ஊசி செலுத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டு 2 காசுகளையும் வெளியே எடுத்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நிஸ்பாவின் பெற்றோர்கள் நிம்மதி அடைந்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Read More
04-09-2025 06:39 AM
Share
கோவை அடுத்துள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள இம்மிடிப்பாளையம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். கோவையில் இருந்து சொலவம்பாளையம், இம்மிடிபாளையம், தேரடிபாளையம், கல்லம் பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக 19 / 28 என்னும் அரசு டவுன் பஸ் கிணத்துக்கடவு வருகிறது. காலை 8 மணி, மதியம் 2:30 மணி, மாலை 6 மணி ஆகிய மூன்று நேரங்களில் வரும் இந்த அரசு டவுன் பஸ்சில் தான் இப்பகுதியில் வசித்து வரும் பள்ளி மாணவ,மாணவிகள்,கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் தங்களது பாட புத்தகங்களை தோளில் சுமந்து கொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேரடிபாளையம் அரசு பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது. அதேபோல் கூலி தொழிலாளர்களும் நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோ மூலமோ வேலைக்கு செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் கடும் அவதி அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை பள்ளி மாணவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காலை 8 மணிக்கு வந்த 19 /28 அரசு டவுன் பஸ் சிறை பிடித்து நிறுத்தினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீசார் பஸ் மறியல் செய்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் இந்த அரசு பஸ் வாரத்தில் இரண்டு நாட்கள் சரியாக வருவதில்லை, மேலும் குறித்த நேரத்திலும் வரவில்லை என்று கூறி வாக்குவாதம் செய்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தினமும் சரியான நேரத்தில் பஸ் வர ஏற்பாடு செய்து தரப்படும் என சமாதானம் செய்தனர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட அரசு பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Read More
02-09-2025 07:00 PM
Share