Loading...
Fri 09, 2026
விரைவு செய்திகள்
தற்போதைய செய்திகள்
அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் குருவாயூரப்பன் பள்ளி மாணவி தன்யாஸ்ரீ முதலிடம்
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடந்தது. போட்டிகள் தேசத்தந்தை மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி, காந்தியச் சிந்தனைகள் ஆகிய 3 தலைப்புகளில் நடந்தது. காலையில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் மங்கலம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 29 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமையாக, பல்வேறு சம்பவங்களை சொல்லி பேசினர். தமிழ் ஆசிரியர்கள் கோடங்கிபாளையம் பள்ளி கணேசன், இடுவாய் பள்ளி ரமேஷ்குமார், கருவம்பாளையம் பள்ளி சரவணன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் வ.சுந்தர் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்கினார். போட்டியின் முடிவில் காளிபாளையம், குருவாயூரப்பன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி தன்யாஸ்ரீ முதலிடம் பெற்றார். இவருக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. பல்லடம் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி வைஷ்ணவலட்சுமி 2 ஆம் இடம் பெற்றார். இவருக்கு ரூ.3 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. உடுமலை, பெதப்பம்பட்டி இலுப்பன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி இனியா மூன்றாம் இடம் பெற்றார். இவருக்கு ரூ.2 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளான மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி முன்ஷிஃபா, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி காவ்யஸ்ரீ ஆகியோருக்கு தலா 2000 ற்கான காசோலை சிறப்பு பரிசுகளாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சி துறை அலுவலர்கள் மணிமேகலை, மேரி, பாஷா ஆகியோர் செய்து இருந்தனர். மதியம் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது. நாளை (7 ந் தேதி) பண்டிட் ஜவஹர்லால் நேரு குறித்த பேச்சு போட்டிகள் நடக்கிறது.
Read More 06-01-2026 04:02 PM
திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 850 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்த பொதுக்கழிப்பிடம் உள்ளது. எல்லா மாணவர்களும் இதை பயன்படுத்தி வருவதால் 7 மற்றும் 8 ஆம்  வகுப்பு மாணவிகள் கழிப்பிடம் செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள். காலையில் பள்ளிக்கு வரும் பொழுது வீட்டில் கழிப்பிடம் சென்று, திரும்பி மாலையில் வீட்டிற்கு செல்லும்போது தான் கழிப்பிடம் செல்கிறார்கள். காலையிலிருந்து அவர்கள் கழிப்பிடம் செல்லாமல்  அடக்கி வைப்பதால் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து கடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளியில் தற்போது உள்ள பொதுக் கழிப்பிடத்திற்கு மேல் மாணவிகளுக்கு என புதியதாக கழிப்பிடம் கட்ட அரசை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைதொடர்ந்து பள்ளியில் புதிய கழிப்பிடம் கட்டித்தர திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் மற்றும் நகராட்சி கமிஷனர் பால்ராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இந்நிலையில் மாணவிகளின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியின்  (பள்ளி மேலாண்மை குழு) எஸ்.எம்.சி  உறுப்பினர் சஃபியுல்லா, மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து மனு கொடுத்து பள்ளியில் கழிப்பறை நிலை குறித்து விளக்கிப் பேசியதுடன், அதனை உடனே கட்டித்தர வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினர். திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார் பள்ளியில் நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக கழிப்பிடம் கட்ட கட்டி தர உறுதியளித்தார்.
Read More 06-01-2026 02:17 PM
தமிழக செய்திகள்
உலகச் செய்திகள்
அபுதாபியில் கேரள தொழிலதிபர் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கி பெண்பணியாளர் மற்றும் 4 இளம் குழந்தைகள் மரணம்
Read More 07-01-2026 04:35 PM
விளையாட்டு மற்றும் சினிமா செய்திகள்
கல்வி மற்றும் மருத்துவ செய்திகள்
வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் அசத்திய திருப்பூர் கிட்ஸ் கிளப் சர்வதேசப் பள்ளி மழலைகள்
கல்வி07-01-2026 04:37 PM
Read More
அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் குருவாயூரப்பன் பள்ளி மாணவி தன்யாஸ்ரீ முதலிடம்
கல்வி06-01-2026 04:05 PM
Read More
மீம்ஸ்
இன்றைய நிகழ்ச்சிகள்
சொர்க்கவாசலில் இன்று
மாவட்ட செய்திகள்
அபுதாபியில் கேரள தொழிலதிபர் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கி பெண்பணியாளர் மற்றும் 4 இளம் குழந்தைகள் மரணம்
Read More 07-01-2026 04:35 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் அசத்திய திருப்பூர் கிட்ஸ் கிளப் சர்வதேசப் பள்ளி மழலைகள்
Read More 07-01-2026 04:37 PM