ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் பெண்களின் "அரோகரா, அரோகரா" கோஷத்துடன் நடந்தது
திருப்பூர் மாவட்டம், 4- செட்டிபாளையம் கிராமம், அங்கேரிபாளையத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று 2 ந் தேதி (புதன்கிழமை) நடந்தது. கும்பாபிஷேகமானது கடந்த 30 ஆம் தேதி திங்கட் கிழமை காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், காப்பு அணிவித்தல், தீபாராதனையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கோபுர கலசம் வைத்து சிலைகளுக்கு கண் திறப்பு செய்வித் தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீர்த்தகுடம், முளைப்பாரி எடுத்து வருதல், முதல்கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8:00 மணிக்கு மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்கி, தொடர்ந்து 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, மூன்றாம் கால யாக வழிபாடுகளும் நடந்தது. இரவு 9 மணிக்கு விநாயகர் மற்றும் மாகாளியம்மனை பீடத்தில் எழுந்தருள செய்தும், எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது.இதனைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 6:30 மணிக்கு மங்கள இசையுடன், மூத்த பிள்ளையார் வழிபாடு, நான்காம் கால யாக பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 9.30 மணி அளவில் திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு விமான கோபுர கலசத்திற்கும், பரிவார மூர்த்திக்கு மஹா கும்பாபிஷேக பெருவிழா நடந்தது. மகா கும்பாபிஷேகத்தை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீ மாணிக்க வாசக மூலாம்லாய குருபீடம் 57வது ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக குருசாமிகள் தலைமை யில், திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.என் விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், வடக்கு மாநகர திமுக செயலாளர் தங்கராஜ், ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் கமிட்டி தலைவர் சாமிநாதன், செயலாளர் முருகசாமி,பொருளாளர் ஸ்ரீனிவாசன், துணைத் தலைவர் குப்புசாமி, துணைச்செயலாளர் சுப்பிரமணியம்,பிரதீபா ராமசந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருமுருகன்பூண்டி அருள்மிகு திருமுருகநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீ முத்துசிவ சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் பூண்டி சிவாச்சாரியார்குழுவினர் நடத்தினர். அப்போது வானத்தில் கருடன் பறக்க பெண்களும், பக்தர்களும் உற்சாகம் அடைந்து மாகாளி அம்மனுக்கு அரோகரா அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
தொடர்ந்து பின்னர் காலை 10.15 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அலங்காரம், தசதான தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் கே மாரப்பன், முன்னாள் மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன், 9 வது வார்டு கவுன்சிலர் திவ்யபாரதி பாலாஜி, கோட்டா பாலு மற்றும் தொழில் அதிபர்கள் முருகசாமி, சுரேஷ், ஏ.பி.பெரியசாமி, அங்குராஜ், ஆர்.மாரப்பன், தங்க முத்துசாமி, பி.சுப்பிரமணியம், சந்தோஷ்குமார்ராஜாமணி, ஆர்.சுப்பிர மணியம், எஸ்.பாலசுப்பிரமணியம், மாரிமுத்து, மாகாளியம்மன் கோயில் கமிட்டி உறுப்பினர் கள், ஊர் பிரமுகர்கள், முக்கிய விருந்தினர்கள், பெண்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அங்கேரிபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் செய்து இருந்தனர். மண்டல பூஜைகள் நாளை 3 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 7 மணி அளவில் தொடர்ந்து 24 நாட்கள் நடைபெறுகிறது.
Read More
02-07-2025 07:22 PM
Share