Loading...
Sun 14, 2025
விரைவு செய்திகள்
தற்போதைய செய்திகள்
முழு உலக சமூகத்துக்கும் வாழ்வியல் முறையை வித்திட்டவர் நபிகள் நாயகம் திண்டுக்கல் அரபிக் கல்லூரி பேராசிரியர் முஹம்மத் அபுதாஹிர் பேச்சு
அவிநாசி சித்தீகி பதிப்பகம் மற்றும் ஜாமிஅதுல் இமாம் முஜத்தித் அல்ஃபிஸ்ஸானி ஷரீஅத் கல்லூரி சார்பில் நானிலம் போற்றும் நபிகள் நாயகம் (ஸல்) என்ற புத்தகத்தில் இருந்து கடந்த மாதம் 31ஆம் தேதி ஆன்லைன் மூலம் மாநிலம் தழுவிய கேள்வி பதில் போட்டி நடந்தது.இதனை தொடர்ந்து சித்தீகி பதிப்பகம் சார்பில் மீலாது விழா மற்றும் நபிகள் நாயகம் பற்றிய மாநிலம் தழுவிய கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு விழா அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு அவிநாசி அல் உஸ்வா இஸ்லாமிய அறக்கட்டளை நிர்வாகி சவுக்கத்தலி தலைமை தாங்கினார். ஹஜரத் முஹம்மது இத்ரீஸ் யூஸுஃபி கிராஅத் ஓதி தொடக்கி வைத்தார். அவிநாசி நீதித்துறை அலுவலர் அப்துல்லா வரவேற்றார். மாணவர் முஹம்மது ஹசன் இஸ்லாமிய கீதம்பாடினார்.அவிநாசி நூருல் யக்கின் பள்ளிவாசல் தலைமை ஹஜ்ரத் மன்சூர்அலி வாழ்த்துரை வழங்கினார்.அவிநாசி தொழில்அதிபர் ஷேக்முஹம்மது தொடக்க உரையாற்றினார். திண்டுக்கல் தாருல் உலூம் யூஸுஃபிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் முஹம்மத் அபுதாஹிர் ஃபாஜில் சிறப்புரை ஆற்றினார்.அப்போது அவர் பேசியதாவது: இஸ்லாம் மதத்தில் தான் சமத்துவம் வேறுன்றியது. நல்லவன், கெட்டவன், கருப்பர் வெள்ளையர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. யாருக்கு இறையச்சம் உள்ளதோ அவர்கள் தாம் உயர்ந்த வாழ்க்கை வாழ்வார்கள். யாரையும் பிற்படுத்தப்பட்ட ஜாதி என ஒதுக்காத மதம் இஸ்லாமிய மதம்தான். கொண்ட கொள்கையில் உறுதி, துடிப்பு கொண்டவர் தான் நபிகள்நாயகம்.சமத்துவம்,சகோதரத்துவம் கொண்டதால்தான் 1480 வருடங்களாக உலக மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நபிகள் நாயகம். ஒரு மனிதன் கண்ணால் கூட மோசடி செய்யக் கூடாது. உலக மக்கள் அனைவரும் முழு உலக சமூகத்துகும் வாழ்வியல் முறையை வித்திட்டவர் நபிகள் நாயகம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து கேள்வி பதில் போட்டியில் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இருந்து 950 நபர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் மாற்று மத சகோதரர்கள். போட்டியின் முடிவில் முதல் பரிசு பெற்ற நாகப்பட்டினம் சுமையா ஜபருல்லா வுக்கு ரூபாய் 10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு திருவாரூர் மாவட்டம் ரஹ்மத் நிஷாவுக்கு ரூ. 7,500ம், மூன்றாவது பரிசு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்று மத சகோதரி ரஞ்சனிக்கு ரூ. 5 ஆயிரம், நான்காவது பரிசாக திருப்பூர் மாவட்டம் மதீனா அப்ரினுக்கு ரூ 3 ஆயிரம், ஐந்தாவது பரிசாக கடலூர் மாவட்டம் மரியம் சாதிக் அலிக்கு ரூபாய் 1,500 ரொக்கப் பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு பரிசாக 45 பேருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.அதேபோல் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டது. முடிவில் அவிநாசி ஜாமிஅதுல் இமாம் முஜத்தித் அல்ஃபிஸ்ஸானி பேராசிரியர் இர்ஃபான் நன்றி கூறினார். திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர் உமர் பாரூக் சிறப்பு துவா ஓதி விழாவை முடித்து வைத்தார்.நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, நகரசெயலாளர் திராவிடம் வசந்தகுமார், நகரமன்ற தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருப்பூர் மாவட்ட செயலாளர் அபுசாலி, அவிநாசி 15 வது வார்டு கவுன்சிலர் பரகத்துல்லா உட்பட அவிநாசி சுற்றுப்பகுதி இஸ்லாமிய பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Read More 13-09-2025 10:18 PM
பீகார் மாநிலத்தில் “சிறப்பு தீவிர மறு ஆய்வு” என்ற பெயரில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கேற்ப வாக்காளர் பட்டியலை மறு ஆய்வு செய்துள்ள இந்திய தேர்தல்ஆணையம்,அதிகாரப்பூர்வமாகவே 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது. இது இந்தியா முழுவதும் பெரும் பேச்சு பொருளாகி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த தேர்தல்களின் போது 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 2016 சட்டமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் வாக்காளர் களின் எண்ணிக்கை 5.77 கோடி. 2019 மக்களவைத் தேர்தலில் புதிய வாக்காளர் களையும் சேர்த்து மொத்தம் 6.24 கோடி பேர். 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த எண்ணிக்கை 6.29 கோடியாக அதிகரித்தது.ஆக சராசரியாக 2016, 2019-ஆம் ஆண்டுகளில் 40 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையிலான எண்ணிக்கையை ஒப்பிடும்போது வெறும் ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டும்தான் அதிகரித்துள்ளனர். இதன் மூலம் இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சதிற்கும் மேலான வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. இந்த 30 லட்சம் வாக்காளர்கள் எவ்வாறு மாயமானார்கள்? இதன் பின்னணி என்ன? இதை தமிழ்நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணமிது. குறிப்பாக, 2016-ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் ஆணையத்தின் படிவம் 6, 7-இன் தகவல்களை நாம் கேட்டுப் பெற வேண்டும். 2016 முதல் 2024-ஆம் ஆண்டு வரை 76 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டிருக் கலாம் என்று டாக்டர் கார்க் கூறுகிறார். எனவே இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் மக்களும் தீவிர கவனம் செலுத்துவதோடு கடந்த ஐந்து தேர்தல்களின் வாக்காளர்கள் பட்டியலையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலும் எளிதாக இருக்காது. இவ்வாறு செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உண்மையில், 2024 தேர்தலுக்கு முந்தைய தேர்தல்களில் தமிழ்நாட்டில் 5.5 சதவிகித வாக்குகளை கூட தாண்டாத பா.ஜ.க., 2024 நாடாளு மன்றத் தேர்தலில் 11 சதவிகித வாக்குகளை பெற்றதோடு பல இடங்களில் பிரதான எதிர்க்கட்சி யான அ.தி.மு.க-வை மூன்றாம் இடத்திற்கு தள்ளியது. இதற்கு மாறிவரும் அரசியல் சூழல் காரணம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தீஸ்தா செதல்வாட்டின் குற்றச்சாட்டு வேறு ஒரு அர்த்தப்பாட்டை கொடுப்பதுடன் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் சந்தேகத்தை தோற்றுவித் திருக்கிறது. இந்த குற்றச்சாட்டை அப்படியே புறந்தள்ள முடியாத வகையில், தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இரண்டும் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு பல மோசடிகளை செய்துள்ளதை கடந்த காலங்களில் நாம் பல்வேறு மாநில தேர்தல்களில் பார்த்துள்ளோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் செய்த மோசடியை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இந்தியாவில் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத் தையும் அழித்து பாசிசத்தை நிலைநாட்ட இந்துத்துவ கும்பல் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு அரசு கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளையும் பாசிச மயமாக்கி வருகிறது. அடிப்படை உரிமை என்று சொல்லப்பட்ட வாக்குரிமையை கூட பறித்து, ‘ஜனநாயகத்தை’ தகர்க்கிறது பாசிச கும்பல். இந்த பாசிச கும்பலை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உள்ளது. பாசிசத்தை வீழ்த்தி பாசிசம் மீண்டெழாதவாறு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பது ஒன்றே தீர்வாக இருக்க முடியும்.
Read More 12-09-2025 06:25 PM
திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் துப்புரவாளன் என்னும் தனியார் குப்பை மேலாண்மை நிறுவனம் மற்றும் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் சார்பில் மறுசுழற்சி செய்யும் பொருட்கள் சேகரிக்கும் நிகழ்ச்சி அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க இன்ட்ராக்ட் சேர்மன் சக்கரபாணி முன்னிலை வைத்தார். பள்ளி இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கில ஆசிரியையுமான லலிதா வரவேற்றார். நிகழ்ச்சியில் துப்புரவாளன் தனியார் குப்பை மேலாண்மை நிறுவன மேலாளர் கோகுலகிருஷ்ணன் மறுசுழற்சி பொருட்கள் குறித்து விளக்கி கூறியதுடன் பள்ளி வளாகத்தை குப்பைகள் இல்லா பள்ளியாக மாற்ற மாணவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் பள்ளியில் படிக்கும் 226 மாணவ, மாணவிகளிடமிருந்து 903 கிலோ கிராம் எடை கொண்ட தினசரி, வார பத்திரிக்கைகள், பேப்பர்கள், புத்தகங்கள், அட்டைப் பெட்டிகள், மின்னனு கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் போன்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகபட்சமாக 28 கிலோ எடை கொண்ட மறுசுழற்சி பொருட்களை கொண்டு வந்த 8 ஆம் வகுப்பு மாணவி ஃபஹீமா பர்வீன், 22 கிலோ கொண்டு வந்த 8 ஆம் வகுப்பு மாணவி பியூட்டி குமாரி, 16 கிலோ கொண்டு வந்த 5 ஆம் வகுப்பு மாணவன் செந்தில்நாதன் ஆகிய மூவருக்கும் சிறப்பு பரிசாக பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மறுசுழற்சி பொருட்கள் கொண்டு வந்த அனைவரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் எடைக்கு தகுந்த அளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட நோட்டுகள், பேனா, பென்சில், ரப்பர், கலர் பென்சில் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது. முடிவில் அம்மாபாளையம் பள்ளி ரோட்ராக்ட் சங்க தலைவர் ஃபஹீமா பர்வீன் நன்றி கூறினார்.
Read More 12-09-2025 06:15 PM
அரசியல்
தமிழக செய்திகள்
உலகச் செய்திகள்
விளையாட்டு மற்றும் சினிமா செய்திகள்
கல்வி மற்றும் மருத்துவ செய்திகள்
மீம்ஸ்
இன்றைய நிகழ்ச்சிகள்
சொர்க்கவாசலில் இன்று
மாவட்ட செய்திகள்
முழு உலக சமூகத்துக்கும் வாழ்வியல் முறையை வித்திட்டவர் நபிகள் நாயகம் திண்டுக்கல் அரபிக் கல்லூரி பேராசிரியர் முஹம்மத் அபுதாஹிர் பேச்சு
Read More 13-09-2025 10:18 PM
தமிழ்நாட்டில் 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றச்சாட்டு
Read More 12-09-2025 06:25 PM
அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் 903 கிலோ மறு சுழற்சி பொருட்கள் சேகரிப்பு
Read More 12-09-2025 06:15 PM
ஓஹோ அப்படியா?
Read More 13-09-2025 10:21 PM